• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மும்பை கனமழையில் ஐந்து மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி

August 31, 2017 தண்டோரா குழு

மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கிருந்த 5 மாடி குடியிருப்பு இடிந்து விழுந்தத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையில், கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால், அந்நகரம் முழுவதுமே வெள்ளக்காடாக மாறியது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மும்பையிலுள்ள பெண்டி பஸார் பகுதியின் 5 மாடி குடியிருப்பு கட்டடம் இன்று காலை(ஆகஸ்ட் 31) இடிந்து விழுந்தது. அந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்,மேலும் 2௦ பேர் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து, காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் உதவியுடன் அந்த கட்டட இடிப்பாடுகளிருந்து 2 உடல்கள் வெளியே எடுத்தனர்.

“இடிந்து விழுந்த கட்டட குடியிருப்பு, ஆபத்தான அமைப்புகள் பட்டியலில் இருந்ததா? என்று தெரியவில்லை. மும்பையில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழை காரணமாக, அதன் அடித்தளம் வலுவிழந்து இருக்கலாம். பெண்டி பஸார் பகுதியிலுள்ள கட்டமைப்பு மிகவும் நெருக்கமாக இருக்கிறது. அங்குள்ள சில வீடுகள் சுமார் 1௦௦ ஆண்டுகள் பழமையானது” என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க