• Download mobile app
18 Mar 2026, WednesdayEdition - 3689
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தொண்டாமுத்தூரில் புதிய கல்லூரி திறக்கப்பட்டதிற்கு மாணவர்கள் நன்றி

August 29, 2017 தண்டோரா குழு

தமிழக அரசால் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்பட்டமைக்கு மாணவ, மாணவிகள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

கோவை தொண்டாமுத்தூர் தொகுதி மக்களின் 70 ஆண்டுகால எதிர்ப்பார்ப்பினை பூர்த்தி செய்திடும் வகையில் தமிழக அரசால் இருபாலர் பயிலும் புதிய பாரதியார் பல்கலைக்கழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியி ஆகஸ்ட் 8 –ம் தேதி திறக்கப்பட்டது.

நடப்பு கல்வி ஆண்டிலேயே BA (ENGLISH), B.COM (ECONOMICS), B.SC (MATHEMATICS), B.COM (CA), B.COM (PA), BBA, பாட பிரிவுகளும் மாணவ மாணவியர் சேர்க்கையை தொடர்ந்து நடைபெற்று வருவதால் பாடப்பிரிவுகளுக்கும் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இதுக் குறித்து மாணவர் சரவணன் கூறுகையில்,

“நான் தற்பொழுது தொண்டாமுத்தூரில் தொடங்கப்பட்டுள்ள புதிய கல்லூரியில் B.SC (MATHEMATICS)முதலாம் ஆண்டு படித்து வருகிறேன். எனது தந்தை கூலி வேலை செய்து வருவதால், தனியார் கல்லூரியில் சேர்ந்து படிக்க வசதியில்லை. அரசுக் கலை கல்லூரியில் கல்வி கட்டணம் மிக மிக குறைவாக இருக்கிறது. மேலும், இங்கு படிப்பதால் எனது எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கையுள்ளது. இதனை ஏறப்படுத்தி தந்த தமிழக அரசுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்,” என்றார்.

இதுக்குறித்து மாணவர் மகேஷ் கூறுகையில்,

“இக்கல்லூரியில் படிப்புக்கு ஏற்றவாறு அனைத்து ஆய்வக வசதியுடன் ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கின்றனர். இதனால் எங்களால் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. அரசு கலை கல்லூரியில் படிப்பதால் முன்னனி நிறுவனங்களிடமருந்து பணியில் சேர்ந்துக் கொள்ள முன்னுரிமை வழங்குகின்றனர்.

மேலும் விளையாட்டுக்கு நல்ல முக்கியத்துவம் தருகிறார்கள். இதனால் எனது உடல் மற்றும் மன ஆரோக்கியம் பெறுகிறது,” என்றார்.

மேலும் படிக்க