• Download mobile app
17 Jun 2026, WednesdayEdition - 3780
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரூ 6 லட்சத்தை பத்திரமாக திருப்பி தந்த பேருந்து ஓட்டுநர்

August 28, 2017 தண்டோரா குழு

எருசலேம் நகரிலிருந்து பினெய் பராக் நகருக்கும் சென்றுக்கொண்டிருந்த ஒரு பயணி, பேருந்திலிருந்து கீழே இறங்கும்போது தவறவிட்ட ரூ 6 லட்சத்தை அவரிடம் அந்த பேருந்தின் ஓட்டுநர் ஒப்படைத்தார்.

ரமாதன் ஜம்சோம் என்னும் 35 வயது பேருந்து ஓட்டுநர் எருசலேம் நகரிலிருந்து பினெய் பராக் நகருக்கும் பேருந்து ஒன்றை கடந்த புதன்கிழமை ஓட்டி சென்றுள்ளார்.

யூத இனத்தை சேர்ந்த ஒருவர் அந்த பேருந்தில் பயணித்தார். பினெய் பராக் நகருக்கும் வந்ததும், கீழே இறங்கிய அவர், தனது பாக்கெட்டில் இருந்து ஏதோ எடுக்கும்போது பத்தாயிரம் அமெரிக்க டாலர், இந்திய மதிப்புப்படி ரூபாய் 6 லட்சம் கீழே விழுந்தது. ஆனால், அதை கவனிக்காமல் சென்றுவிட்டார்.

கீழே விழுந்து கிடந்த பணத்தை பார்த்த பேருந்து ஓட்டுநர், அந்த பணத்தை எடுத்துக்கொண்டு, பேருந்து அலுவலகத்திலிருந்த அதிகாரியிடம் அந்த பணத்தை தந்து, நடந்ததை அவரிடம் தெரிவித்தார்.

உடனே, அந்த பணத்தை எடுத்துக்கொண்டு, அதிகாரியும் ஓட்டுநரும் அருகிலிருந்த காவல்நிலையத்திற்கு சென்று அதை தந்து விவரத்தை கூறினர்.

காவல்துறை அதிகாரி, உள்ளூர் செய்தித்தாளிலுள்ள காணாமல்போன பொருள்கள் பக்கத்தில், காணாமல்போன பணத்தை குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டார். அந்த செய்தியை கண்ட அந்த பணத்தின் உரிமையாளர், காவல்துறை அதிகாரியை தொடர்புக்கொண்டார்.

அந்த பணத்தின் உரிமையார் அவர் தான், என்று உறுதி செய்த பிறகு, அந்த பணத்தை காவல்துறை அதிகாரி ஒப்படைத்தார். நேர்மையாக நடந்துக்கொண்ட அந்த பேருந்து ஓட்டுநருக்கு அந்த உரிமையாளர் மனதார நன்றி கூறினார்.

மேலும் படிக்க