• Download mobile app
17 Jun 2026, WednesdayEdition - 3780
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிறுவன் உயிரை காப்பாற்றிய நாய்

August 28, 2017 தண்டோரா குழு

மெக்ஸிகோவில் பள்ளத்தில் விழுந்த 14 வயது சிறுவனை, லப்ரடோர் இனத்தை சேர்ந்த நாய் காப்பாற்றியுள்ளது.

மெக்ஸிகோ, கலியேனா நகரை சேர்ந்த ஜுஆன் என்னும் 14 வயது சிறுவன், சியேரா மாத்ரே ஒரியேண்டல் மலைபகுதியில் நடந்த விடுமுறைக்கான மாணவர்கள் முகாமில் கலந்து கொண்டான். அந்த முகாமில், மாலை நேரத்தில், மாணவர்கள் ஒரு இடத்தில் தீ மூட்டி குளிர்காயிந்து கொண்டு, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்தனர்.

மாலையில் குளிர்காய தேவைப்படும் விறகுகளை எடுத்துவர சிறுவன் ஜுஆன், அருகிலிருந்த காட்டு பகுதிக்கு சென்றான். அந்த முகாமிலிருந்த நாய் மேக்ஸ் அவனை பின்தொடர்ந்து சென்றது. தேவையான விறகுகளை எடுத்துக்கொண்டு, முகாமிற்கு திரும்பி வரும்போது, பள்ளம் ஒன்றில் அவன் தவறி விழுந்தான்.

அவனால், மேலே ஏறி வரமுடியவில்லை. அவனை பின்தொடந்து வந்த நாய் அவன் விழுந்த பள்ளம் அருகில் நிற்பதை கண்டான். அவன் விழுந்த பள்ளத்தில் இறங்கி, அவனை மேலே அழைத்து வர நாய் முயன்றது அவன் மேலே வந்துவிட்டான்.

பின்னர் சிறுவன் விழுந்த இடத்தின் அருகில் ஒரு குளம் இருந்தது. சிறுவனும் மேக்ஸ்சம் குளத்தில் இருந்த தண்ணீரை குடித்து, காட்டிலிருந்த கனிகளை உண்டு, சுமார் இரண்டு நாட்கள் அங்கேயே இருந்தனர்.

அதன்பிறகு, அந்த இடத்திற்கு அருகிலிருந்த வீட்டை அடைந்து, அங்கிருந்தவர்களிடம் நடந்ததை ஜுஆன் தெரிவித்தான். உடனே அவர்கள், அங்கிருந்த காவல்நிலையத்திற்கு தகவல் தந்தனர். தகவல் அறிந்த அவர்கள் ஜுஆனும் மேக்ஸ்சம் இருந்த விட்டிருக்கு வந்தனர்.

இரண்டு நாட்கள் சாப்பிட சரியான உணவு இல்லாததாலும், பல தூரம் நடந்து வந்ததால் ஏற்பட்ட களைப்பால் இருந்த சிறுவனை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

சிகிச்சைக்கு பிறகு, வீடு திரும்பிய ஜுஆன், தன்னுடைய உயிரை காப்பாற்றிய மேக்ஸ்சை தத்து எடுக்க விருப்பம் தெரிவித்தான்.

மேலும் படிக்க