• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் குடியரசுத் தலைவரை சந்திப்போம் – தங்க தமிழ்ச்செல்வன்

August 26, 2017

தமிழக (பொறுப்பு) ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் இரண்டு நாளில் குடியரசுத் தலைவரை சந்திப்போம் என்று தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

இதுக் குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
“நாங்கள் அளித்த மனு மீது தமிழக (பொறுப்பு )ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் இரண்டுநாட்களில் குடியரசுத் தலைவரை சந்திப்போம். அவரிடம் இதுக்குறித்து மனு அளிக்கப்படும்.

சபாநாயகர் தனபால் முதல்வராக வேண்டும் என்று திவாகரன் கூறியது தனிப்பட்ட கருத்து. எனினும் கட்சியின் மூத்த உறுப்பினரான தனபால் முதல்வராக வரலாம்.

தற்போது நடைபெற்று வரும் ஆட்சிக்கு எதிராக துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம் அறிவித்த போராட்டத்தை எப்போது நடத்தப்போகிறார். தொகுதி மக்களை சந்திக்க முடியாமல் வருத்தத்தோடு விடுதியில் தங்கியுள்ளோம்.”
இவ்வாறு தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.

மேலும் படிக்க