• Download mobile app
18 Mar 2026, WednesdayEdition - 3689
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மோதிரத்தை விற்க வந்தவருக்கு நகைக்கடைகாரர் காட்டிய அன்பு

August 24, 2017 தண்டோரா குழு

வறுமையின் காரணமாக மோதிரத்தை விற்க வந்தவருக்கு பணம் கொடுத்து உதவிய நகைக்கடை முதலாளி.இந்த சம்பவம் அமெரிக்காவில் பலருக்கு நெகிழ்ச்சியை தந்துள்ளது.

நோவா என்பவர் அமெரிக்காவில் நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். சமீபத்தில் அவருடைய கடைக்கு ஒரு தாய் தன்னுடைய இரண்டு சிறிய குழந்தைகளை அழைத்துக்கொண்டு வந்துள்ளார். அவரிடம் பணம் இல்லாத காரணத்தால், அவருடைய மோதிரத்தை விற்க விரும்புவதாக கடைக்காரரிடம் தெரிவித்தார். இதனை கேட்ட அந்த நகைக்கடைகாரர், அதை வாங்க மறுத்துவிட்டு, தன்னுடைய சட்டை பையிலிருந்த பணத்தை எடுத்து அவரிடம் தந்தார். நோவாவின் இந்த அன்பை கண்ட அவர் அவரை கட்டியணைத்து தன்னுடைய நன்றியை தெரிவித்தார்.

“உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு நம்மால் ஆன உதவியை செய்வது அவசியம்” என்று அந்த நகைக்கடை உரிமையாளர் தெரிவித்தார்.

மேலும் படிக்க