• Download mobile app
19 Dec 2025, FridayEdition - 3600
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெள்ளலூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம்

August 24, 2017 தண்டோரா குழு

கோவை வெள்ளலூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை மாநகராட்சி ஆணையாளர்க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டம் கோவை மாநகராட்சி, பிரதான அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் கோவை மாநகராட்சி ஆணையாளர்க.விஜயகார்த்திகேயன்உட்பட, அனைத்து துறை உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், மகேந்திரா கன்சல்டிங் பொறியாளர்கள் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தின் வடிவமைப்பு, வரைவுத்திட்டங்கள், உள்கட்டமைப்புகள், போக்குவரத்துக்கு தேவையான உரிய சாலைகள், பயனாளிகளின் வசதிகள், திட்டத்திற்கு தேவையான நிலங்கள்,பேருந்துகள் நிறுத்துவதற்கு தேவையான வசதிகள், பயனாளிகளின் பாதுகாப்பு மற்றும் திட்டத்திற்கான செலவினத்தொகை போன்ற விவரங்களை விளக்கக்காட்சி மூலம் விளக்கி காட்டினார்கள்.

நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி உயர், காவல்துறை,பொதுப்பணித்துறை போக்குவரத்துத்துறை, மின்சாரத்துறை அலுவலர்கள் ஆகியோர் சிறப்பான ஒருங்கிணைந்த பேருந்துநிலையம் அமைப்பதற்கு அவரவர்துறை சார்ந்த கருத்துக்களை இக்கூட்டத்தில் எடுத்துரைத்தனர்.

மேலும் படிக்க