• Download mobile app
17 Jun 2026, WednesdayEdition - 3780
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெள்ளலூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம்

August 24, 2017 தண்டோரா குழு

கோவை வெள்ளலூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை மாநகராட்சி ஆணையாளர்க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டம் கோவை மாநகராட்சி, பிரதான அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் கோவை மாநகராட்சி ஆணையாளர்க.விஜயகார்த்திகேயன்உட்பட, அனைத்து துறை உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், மகேந்திரா கன்சல்டிங் பொறியாளர்கள் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தின் வடிவமைப்பு, வரைவுத்திட்டங்கள், உள்கட்டமைப்புகள், போக்குவரத்துக்கு தேவையான உரிய சாலைகள், பயனாளிகளின் வசதிகள், திட்டத்திற்கு தேவையான நிலங்கள்,பேருந்துகள் நிறுத்துவதற்கு தேவையான வசதிகள், பயனாளிகளின் பாதுகாப்பு மற்றும் திட்டத்திற்கான செலவினத்தொகை போன்ற விவரங்களை விளக்கக்காட்சி மூலம் விளக்கி காட்டினார்கள்.

நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி உயர், காவல்துறை,பொதுப்பணித்துறை போக்குவரத்துத்துறை, மின்சாரத்துறை அலுவலர்கள் ஆகியோர் சிறப்பான ஒருங்கிணைந்த பேருந்துநிலையம் அமைப்பதற்கு அவரவர்துறை சார்ந்த கருத்துக்களை இக்கூட்டத்தில் எடுத்துரைத்தனர்.

மேலும் படிக்க