• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வெள்ளலூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம்

August 24, 2017 தண்டோரா குழு

கோவை வெள்ளலூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை மாநகராட்சி ஆணையாளர்க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டம் கோவை மாநகராட்சி, பிரதான அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் கோவை மாநகராட்சி ஆணையாளர்க.விஜயகார்த்திகேயன்உட்பட, அனைத்து துறை உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், மகேந்திரா கன்சல்டிங் பொறியாளர்கள் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தின் வடிவமைப்பு, வரைவுத்திட்டங்கள், உள்கட்டமைப்புகள், போக்குவரத்துக்கு தேவையான உரிய சாலைகள், பயனாளிகளின் வசதிகள், திட்டத்திற்கு தேவையான நிலங்கள்,பேருந்துகள் நிறுத்துவதற்கு தேவையான வசதிகள், பயனாளிகளின் பாதுகாப்பு மற்றும் திட்டத்திற்கான செலவினத்தொகை போன்ற விவரங்களை விளக்கக்காட்சி மூலம் விளக்கி காட்டினார்கள்.

நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி உயர், காவல்துறை,பொதுப்பணித்துறை போக்குவரத்துத்துறை, மின்சாரத்துறை அலுவலர்கள் ஆகியோர் சிறப்பான ஒருங்கிணைந்த பேருந்துநிலையம் அமைப்பதற்கு அவரவர்துறை சார்ந்த கருத்துக்களை இக்கூட்டத்தில் எடுத்துரைத்தனர்.

மேலும் படிக்க