• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரூ.50 இல்லாததால் சிறுவன் பலி

August 22, 2017 தண்டோரா குழு

ராஞ்சியிலுள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை தொகையில் 50 ரூபாய் குறைந்ததால்,’சிடி’ ஸ்கேன் எடுக்க முடியாமல், ஒரு வயது ஆண் குழந்தை உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியை சேர்ந்த சிறுவன், வீட்டின் மாடியில் விளையாடிக்கொண்டிருந்த போது கீழே விழுந்தால், அவனுடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவனுடைய பெற்றோர்கள் ராஞ்சியிலுள்ள ராஜேந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுவனின் தலையில் ஏற்பட்ட காயம் குறித்து, தெரிந்துக்கொள்ள, அவனுக்கு சிடி ஸ்கேன் செய்ய வேண்டும் என்ற தெரிவித்தனர்.

இதையடுத்து, அவனுடைய தந்தை மருத்துவமனையில் சிடி ஸ்கேன் எடுக்கும் இடத்திற்கு மகனை அழைத்து சென்றுள்ளார். அந்த ஸ்கேன் செய்ய 1,350 ரூபாய் செலுத்தவேண்டும் என்று அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர். எதிர்பாராதவிதமாக, அந்த சிறுவனின் தந்தையிடம் 1,300 ரூபாய் மட்டுமே இருந்தது. மீதி இருந்த 50 ரூபாயை எப்படியாவது கட்டிவிடுகிறேன் என்று அவர்களிடம் கெஞ்சியுள்ளார். ஆனால் 50 ரூபாயை செலுத்தினால் தான், சிறுவனுக்கு ஸ்கேன் எடுக்கப்படும் என்று கூறிவிட்டனர்.இதனால் ஏற்பட்ட கால தாமதத்தால்,அந்தக் குழந்தை, பரிதாபமாக இறந்தது.

ஜார்கண்ட் மாநிலத்தில் இதுபோன்ற சம்பவம் நடப்பது முதல் முறையல்ல. கடந்த 2015ம் ஆண்டு, விபத்து காரணமாக, மருத்துவமனையின் அவசர பிரிவில் சேர்க்கப்பட்ட 2 பேர், மருத்துவர்கள் யாரும் அங்கு இல்லாத காரணத்தால், பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் கடந்த 2016ம் ஆண்டு, பிரசவ வலியால், மருத்துவமனையில் ஒரு பெண் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர், அவருடைய வயிற்றிலிருந்த குழந்தை இறந்துவிட்டது என்று தெரிவித்தனர். ஆனால், வயிற்றில் இறந்த குழந்தையை இரண்டு நாள் ஆகியும் வெளியே எடுக்கவில்லை. இதனால், அந்த பெண்ணின் உடல்நலம் மோசாகி கொண்டே இருந்தது. அந்த பெண்ணின் ரத்த வகை இல்லாததால், அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க