• Download mobile app
03 Nov 2025, MondayEdition - 3554
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு குறித்து புகார் தெரிவிக்க இணையதளம் அறிமுகம்

August 21, 2017 தண்டோரா குழு

அரசு புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்வோர்களின் மீது புகார்கள் தெரிவிக்க http://gdp.tn.gov.in என்ற வலைதளம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமப்பு மேற்கொள்ளப்பட்டது தொடர்பான புகார்களை பொதுமக்கள் தபால் மூலமாகவோ, அல்லது நேரடியாகவோ வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் மற்றம் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் புகார் அளித்து வந்தனர்.

தற்போது, அந்த நடைமுறையை எளிமையாக்கும் வகையில் பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்தே அரசு புறம்போக்கு நிலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பின் மீது http://gdp.tn.gov.in என்ற வலைதளம் மூலம் அறிவிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் “பொதுமக்கள் இந்த இணையவழியினைப் பயன்படுத்தி அரசு புறம்போக்கு நிலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு குறித்து புகார்களை பதிவு செய்து தீர்வு பெற அறிவுறுத்தப்படுகிறது,” எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க