• Download mobile app
03 May 2025, SaturdayEdition - 3370
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இணைப்பில் இழுபறி, ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்., கட்சி அலுவலகம் வருகை தற்காலிக ரத்து

August 21, 2017 தண்டோரா குழு

அதிமுகவின் இரு அணிகளும் இன்று இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அணிகள் இணைவதில்தொடர்ந்து இழுபறி நீடிப்பதால் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்., தலைமை கழக அலுவலகம் வருகை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சசிகலா நீக்கம் குறித்த தீர்மான நகலை அளித்தால் மடடுமே தலைமைக் கழகத்திற்கு வருவோம் என ஓபிஎஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தான் இரு அணிகள் இணைப்பில் தாதமம் ஏற்பட்டு வருகிறது எனவும் கூறப்படுகிறது.

தற்போது உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஒ.பி.எஸ் இல்லத்தில் பேச்சிவார்த்தை நடத்தி வருகிறார். இதனிடையே இன்று மாலை ஜெயலலிதா சாமதி முன்பு அணிகள் இணையும் என அதிமுக வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க