• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இணைப்பில் இழுபறி, ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்., கட்சி அலுவலகம் வருகை தற்காலிக ரத்து

August 21, 2017 தண்டோரா குழு

அதிமுகவின் இரு அணிகளும் இன்று இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அணிகள் இணைவதில்தொடர்ந்து இழுபறி நீடிப்பதால் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்., தலைமை கழக அலுவலகம் வருகை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சசிகலா நீக்கம் குறித்த தீர்மான நகலை அளித்தால் மடடுமே தலைமைக் கழகத்திற்கு வருவோம் என ஓபிஎஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தான் இரு அணிகள் இணைப்பில் தாதமம் ஏற்பட்டு வருகிறது எனவும் கூறப்படுகிறது.

தற்போது உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஒ.பி.எஸ் இல்லத்தில் பேச்சிவார்த்தை நடத்தி வருகிறார். இதனிடையே இன்று மாலை ஜெயலலிதா சாமதி முன்பு அணிகள் இணையும் என அதிமுக வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க