• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சேலம் ரயில்வே கோட்டத்தில் பல்வேறு பயணிகள் வசதிகள் திறப்பு

August 19, 2017 தண்டோரா குழு

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் உள்ள ரயில்நிலையங்களுக்கு பல்வேறு பயணிகள் வசதிகளை இன்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு புதுதில்லியில் இருந்து காணொலிக்காட்சி மூலம் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

சேலம் ரயில்நிலையத்தின் இரண்டாவது நுழைவு வாயில் வரை நீட்டிக்கப்பட்ட நடைமேம்பாலம், சேலம் ரயில்நிலையத்தில் முதல் நடைமேடை அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள நிலைய மேலாளர் அறை மற்றும் முக்கிய விருந்தினர் அறை, சாமல்பட்டி ரயில்நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நடைமேம்பாலம், ஆகியவற்றை அவர் இன்று திறந்து வைத்தார்.

இவ்விழாவில் சேலம் பாராளுமன்ற உறுப்பினர் வி. பன்னீர்செல்வம், சேலம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.சக்திவேல், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா, சேலம் கோட்ட அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் ரயில் பயணிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் காணொலிக்காட்சி மூலம் உரையாற்றிய சுரேஷ் பிரபு ரயில்வே அமைச்சகம் தற்போது தமிழகத்தில் பல்வேறு ரயில்நிலையங்களில் பயணிகள் வசதிகளை மேம்படுத்தி வருவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும் பல வசதிகள் செய்யப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் படிக்க