• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் அதிகாரிகள் ஆய்வு

August 19, 2017 தண்டோரா குழு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற வருவாய்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

சென்னை போயஸ் தோட்டத்தில், அமைந்துள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்றப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

இதனிடையே ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனை அடுத்து வேதா இல்லம் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

வேதா இல்லத்தில் தங்கியிருந்தவர்களையும் காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் வருவாய்துறை அதிகாரிகள் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் படிக்க