• Download mobile app
03 May 2026, SundayEdition - 3735
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிமுக இரு அணிகள் பிரிந்த இடத்தில் மீண்டும் இணையுமா ?

August 18, 2017 தண்டோரா குழு

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுக ஓபிஎஸ் அணி சசிகலா என இரண்டு அணிகளாக பிரிந்து தற்போது ஓபிஎஸ் அணி , எடப்பாடி அணி, தினகரன் அணி என மூன்று அணிகளாக பிரிந்து உள்ளது.

பல்வேறு கட்ட முயற்சிக்கு பின் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி அணி தற்போது இணைவதற்கான ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. இதற்கிடையில்,கடந்த பிப்ரவரி 7 ம் தேதி ஜெயலலிதா நினைவிடத்தில் தான் சசிகலாவுக்கு எதிரான முடிவை ஓ.பன்னீர்செல்வம் எடுத்தார்.இந்நிலையில் 6 மாதங்களுக்கு பிறகு பன்னீர்செல்வமும், எடப்பாடியும் வருவதால் ஜெயலலிதா நினைவிடத்திற்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

பிரிவதாக முடிவு எடுத்த இடத்திலேயே எடப்பாடி அணியுடன் இணயை திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் பழனிசாமி மற்றும் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம், ஜெயலலிதா நினைவிடத்திற்கு இரவு 7.30 மணிக்கு செல்கின்றனர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க