• Download mobile app
03 Nov 2025, MondayEdition - 3554
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆள்மாறாட்டம் செய்து விமானத்தில் ஏற முயன்ற நபர் கைது

August 18, 2017 தண்டோரா குழு

மும்பையில் ஆள்மாறாட்டம் செய்து விமானத்தில் ஏற முயன்றவரை மும்பை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மும்பையைச் சேர்ந்த சையதுகானின் உறவினர் ஒருவர் மும்பையிலிருந்து ஹைதராபாதுக்கு செல்ல விமான டிக்கெட் வாங்கியிருந்தார். ஆனால், கடைசி நிமிடத்தில் அவரால் பயணம் செய்ய முடியவில்லை. இதை அறிந்த சையதுகான், விமானடிக்கெட் வாங்க செலுத்திய பணம் வீணாக போகாமல் இருக்க, அந்த டிக்கெட்டைப் பயன்படுத்தி ஹைதராபாத் செல்ல திட்டமிட்டார்.

இதனையடுத்து,சையதுகான் உறவினரின் ஆதார் அட்டையிலிருந்த புகைப்படத்தின் மேல், தன்னுடைய புகைப்படத்தை ஓட்டியுள்ளார். அந்த ஆதார் அட்டையை எடுத்துக்கொண்டு விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

விமானம் ஏறுவதற்கு முன்,டிக்கெட்டும் ஆதார் அட்டையும் சரிபார்க்கப்பட்டது.அதை சரிப்பார்த்த அதிகாரிகள் அந்த ஆதார் அட்டையில் புகைப்படத்திற்கு மேல் சையதுகானின் புகைப்படத்தை ஓட்டியிருப்பதை கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து, போலி ஆவணம், ஆள்மாறாட்டம் மற்றும் மோசடி ஆகிய குற்றங்களுக்காக மும்பை விமான காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் படிக்க