• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தென்மேற்கு பருவமழை 33 சதவீதம் அதிகம்

August 17, 2017 தண்டோரா குழு

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 33 சதவீதம் அதிகம் பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியுள்ளார்.

இதுக்குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

“தமிழகத்தில் 24 மணி நேரத்தில் சில இடங்களில் மழை, ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சென்னை அண்ணா பல்கலையில் 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் 1 முதல் தற்போது வரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 21 செ.மீ., பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 33 சதவீதம் அதிகம்.”

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க