August 16, 2017 
தண்டோரா குழு
                                சென்னை கிண்டியில் உள்ள லதா ரஜினிகாந்த் நடத்தும் தனியார் பள்ளி  மூடப்பட்டது.
சென்னை, கிண்டி ரேஸ்கோர்ஸ் அருகே லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் ஆஸ்ரமம்  வாடகை கொடுக்காத காரணத்தால் இழுத்து மூடப்பட்டது.இதன் காரணமாக அங்கு படித்து வந்த மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெங்கடேஸ்வரலு என்பவருடைய இடத்தில் இந்த ஆஸ்ரமம் இயங்கி வருகிறது.இந்தப் பள்ளியின் தாளாளராக லதா ரஜினிகாந்தும், நிர்வாக அறங்காவலராக ரஜினிகாந்தும் உள்ளனர். 
மேலும் கடந்த சில ஆண்டுகளாக வாடகை கொடுக்கவில்லை என்றக் காரணத்தால்,இந்த பள்ளி மூடப்பட்டதாகவும்,அதனால் இங்கு பயின்ற மாணவர்கள் அனைவரும்  வேளச்சேரி பள்ளிக்கு மாற்றப்பட்டதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது.