• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தடையை மீறி தேசியக்கொடி ஏற்றிய மோகன் பகவத் !

August 15, 2017 தண்டோரா குழு

கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள பள்ளியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தடையை மீறி தேசியக்கொடி ஏற்றினார்.

கேரள மாநிலம் பாலக்காட்டில்,அரசு உதவி பெறும் கர்ணகி அம்மன் என்ற பள்ளி செயல்பட்டு வருகிறது. மக்கள் பிரதிநிதிகள், பள்ளி ஊழியர்கள் மட்டும் தான் பள்ளியில் கொடியேற்ற வேண்டும். அமைப்புகள் தலைவர்கள் கொடியேற்றக்கூடாது என்று அம்மாவட்ட ஆட்சித்தலைவர் உத்திரவிட்டிருந்தார்.

இதற்கிடையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், தடையை மீறி அப்பள்ளியில் தேசியக்கொடியை ஏற்றினார்.இதனால் பள்ளி நிர்வாகிகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இது குறித்து மோகன் பகவத் கூறும்போது,

பள்ளி நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று தான் தேசிய கொடியேற்றியாதாகவும், இது குறித்து நிர்வாகம் தரப்பில் விளக்கமளிப்பதே சிறப்பானதாக இருக்கும் என்றார்.

தடையை மீறி மோகன் பகவத் கொடி ஏற்றிய இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Attachments area

மேலும் படிக்க