• Download mobile app
03 Nov 2025, MondayEdition - 3554
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொள்ளையர்களை கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள்

August 12, 2017 தண்டோரா குழு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்ற கும்பலை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தில் வீடுகளுக்குள் புகுந்த ஒரு கொள்ளை கும்பல் அங்கிருந்தவர்களை மிரட்டி வீட்டில் இருந்தவற்றை திருட முயன்றுள்ளனர். இதில் வீட்டில் இருந்த ஒருவர் கொள்ளை கும்பலுடன் போராடி கூச்சலிட்டுள்ளார்.

இதனிடையே அவருடைய சத்தம் கேட்டு திரண்ட ஊர்பொதுமக்கள் கொள்ளையர்கள் 5 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். கொள்ளையர்களை கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் அடித்தனர். அதன் பின் காவல்துறையினரிடம் அவர்களை மக்கள் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் பொதுமக்களை பார்த்தவுடன் கொள்ளை கும்பலை சார்ந்த மீதம் உள்ள நான்கு பேர் ஆம்னி வேனில் தப்பிச் சென்றுவிட்டனர். காவல்துறையினர் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க