• Download mobile app
31 Aug 2026, MondayEdition - 3855
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தன்மானத்துக்கு தகராறுன்னா யாருனாலும் இதான் செய்வாங்க!

August 10, 2017 tamilsamayam.com

மதிக்காத இடத்தில் இருந்து வெளியேற வேண்டும் என முன்னாள் பயிற்சியாளர் கும்ளே சரியான முடிவு எடுத்துள்ளதாக முன்னாள் கேப்டன் அசாருதின் தெரிவித்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் போது, பயிற்சியாளர் கும்ளே, கேப்டன் கோலி இருவருக்கும் இடையே கடுமையான கருத்து மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து ஒருவழியாக கும்ளே பதவியில் இருந்து விலகினார். இதன்பின் பல்வேறு சர்ச்சைகளை தொடர்ந்து, முன்னாள் இயக்குனர் ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் தன்மானத்துக்கு ஒரு பிரச்சனை வந்தால், கும்ளே இடத்தில் யாராக இருந்தாலும் இதைத்தான் செய்வாங்க என முன்னாள் இந்திய கேப்டன் அசாருதின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அசாருதின் கூறுகையில்,

கும்ளேவின் நிலையை நினைத்தால் கொஞ்சம் கஷ்டமாகத்தான் உள்ளது. அவரை எனக்கு நன்கு தெரியும். அவர் கோவப்படும் நபர் அல்ல. ஆனால், தன்மானத்தை இழப்பதை விட விலகியிருக்கலாம் என அவர் நினைத்திருக்கலாம். என்னைப்பொறுத்தவரை அவர் மிகச்சரியான முடிவைத்தான் எடுத்துள்ளார். என்றார்.

மேலும் படிக்க