• Download mobile app
02 Nov 2025, SundayEdition - 3553
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எடப்பாடி அணி விழித்துக் கொண்டது – கே.பி முனிசாமி

August 10, 2017 தண்டோரா குழு

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி தற்போது தான் விழித்துள்ளது என ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த கே.பி முனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுகவிலிருந்து சசிகலாவை நீக்கினால் மட்டுமே அணிகள் இணைப்புக்கான பேச்சுவார்த்தை சாத்தியம் என ஓ.பி.எஸ்., அணியை சேர்ந்த கே.பி.முனுசாமி கூறியுள்ளார். மேலும் 10 ஆண்டுகளுக்கு முன்பே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர் தான் டிடிவி தினகரன்.

தினகரனை மட்டுமின்றி சசிகலா குடும்பத்தையும் மொத்தமாக அதிமுகவில் இருந்து நீக்கினால் மட்டுமே இரு அணிகள் இணைப்பு பற்றி பேசப்படும் என்று தெரிவித்துள்ளார்.மேலும் ஓபிஎஸ்க்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்பது வெறும் யூகமே எனவும், நாட்டு மக்களையும் இயக்கத்தையும் காப்பாற்ற வேண்டும் என போராடும் தலைவரை பதவி கொடுத்து சரி செய்துவிட முடியும் என யாரும் எண்ணிவிட முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க