• Download mobile app
03 May 2026, SundayEdition - 3735
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

துணை கலெக்டராக பொறுப்பேற்றார் பிவி சிந்து!

August 9, 2017 தண்டோரா குழு

ஆந்திரா மாநிலத்தின் துணை கலெக்டராக பி.வி. சிந்து இன்று(ஆகஸ்ட் 9) பதவியேற்றுள்ளர்.

கடந்த ஆண்டு ரியோவில் நடந்த ஒலிம்பிக்கில் பெண்கள் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் வெள்ளிப்பதக்கம் வென்ற பி.வி சிந்து, விஜயவாடா நகரின் புறநகர் பகுதியான கோல்லாப்புடி என்னும் இடத்திலுள்ள “Chief Commissioner of Land Administration(CCLA)” அலுவலகத்தின் ஆந்திர மாநிலத்தின் துணை கலெக்டராக இன்று பதவியேற்றார்.

கடந்த ஜூலை 27ம் தேதி, ஆந்திர அரசு அவருக்கு துணை கலெக்டர் பதவியை வழங்கியது. ஆந்திர முதலமைச்சர், சந்திரபாபு நாயுடு, தனிப்பட்ட முறையில் சிந்துவுக்கு நியமன உத்தரவு கடிதத்தை வழங்கினார்.

மேலும் அவவருக்கு 3 ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும். ஆந்திர அரசின் விதிமுறைகளையும் நடைமுறைகளையும் சரியாக பின்பற்றினால், 9 ஆண்டுகளில் UPSC வழங்கும் IAS பதவி கிடைக்க வாய்ப்பு உண்டு.

இந்த சாதனைக்காக அப்போதே சிந்துவிற்கு ரூ.3 கோடி, அமராவதியில் 1000 சதுரடியில் வீட்டு மனை பரிசாக ஆந்திர அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க