• Download mobile app
03 May 2026, SundayEdition - 3735
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சியை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்

August 7, 2017 தண்டோரா குழு

பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் சரியாக செய்யாத கோவை மாநகராட்சியை கண்டித்து சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகில் கோவை மாநகர் தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

கோவையில் மாநகராட்சிகுட்பட்ட பகுதியில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் சரியான முறையில் வழங்கிட வலியுறுத்தியும் சிங்காநல்லூர் , கவுண்டம்பாளையம் , சரவணம்பட்டி,குறிச்சி , பீளமேடு மற்றும் மாநகர பகுதிகளில் நான்கு தினங்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க வலியுறுத்தியும் சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகில் தி.மு.க சார்பில் சிங்காநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திக் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது 15முதல் 20 தினங்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கி மக்களை வாட்டி வதைக்கின்ற அ.தி.மு.க ஆட்சியையும் , கோவை மாநகராட்சியையும் கண்டிக்கிறோம் என கோஷங்கள் எழுப்பபட்டன.

ஆர்பாட்டத்தில் பொதுமக்கள் குடியிருப்போர் நகர்நலச்சங்க நிர்வாகிகள் , வணிகர்கள், தொழிலாளர்கள் , தி.மு.கழக செயல்வீரர்கள் என 5௦௦க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும், பெண்கள் காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்தனர்.

மேலும் படிக்க