• Download mobile app
10 May 2024, FridayEdition - 3012
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஏலம் விடப்படும் இங்கிலாந்து இளவரசி டயானா எழுதிய கடிதங்கள்

August 7, 2017 தண்டோரா குழு

மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானா எழுதிய முக்கியமான கடிதங்கள் சிலவற்றை ஏலம் விட ஏற்பாடு நடைபெறுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசி டயானாவின் இறப்பும் அவருடைய வாழ்க்கை குறித்த சர்ச்சைகளும் இன்னும் முடிவடையவில்லை. கடந்த 1997-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி, பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடந்த ஒரு கார் விபத்தில் இங்கிலாந்து இளவரசி டயானா உயிரிழந்தார்.

அவர் இறப்பதற்கு முன்பாக தனது தோழி கரோலின் ப்ரைட்க்கு கடிதம் எழுதியுள்ளார். 1980-ம் ஆண்டு ஜனவரி முதல் 1982 ஜனவரி வரை எழுதப்பட்ட கடிதங்களை இங்கிலாந்தின் ஆர்.ஆர். நிறுவனம் ஆவணப்படுத்தியது. தற்போது அந்த கடிதங்கள் 125,000 அமெரிக்க டாலருக்கு ஏலம் போகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

டயானாவின் திருமண வாழ்க்கை, கணவருக்கும் வேறொரு பெண்ணுக்கும் இடையே உறவு இருப்பதாக அவருக்கு ஏற்பட்ட சந்தேகம் ஆகியவற்றை குறித்து அவர் தனது தோழிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவருடைய சுயமரியாதையை காப்பாற்ற முடியாத நிலை, மன அழுத்தம், மற்றும் ஊடகங்களின் தலையீடு குறித்தும் அந்த கடிதத்தில் குறிப்பீட்டுள்ளார்.

மேலும் படிக்க