• Download mobile app
03 May 2026, SundayEdition - 3735
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹிரோஷிமா, நாகாசாகி அணு குண்டு வீச்சு நினைவு தினம் அனுசரிப்பு

August 7, 2017 தண்டோரா குழு

இரண்டாம் உலகப்போபோரின்போது, அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா, நாகாசாகி பகுதியில் அணு குண்டு வீசயது. இதன் 72-ம் ஆண்டு நினைவு தினத்தை ஜப்பான் இன்று அனுசரித்தது.

1939-ம் ஆண்டு முதல் 1945-ம் ஆண்டு வரை இரண்டாம் உலகப்போரர் நடந்தது. ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஒரு அணியாகவும், இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, போலந்து, சீனா, கிரீஸ், யுகோஸ்லாவியா, மற்றும் பெல்ஜியம் மற்றொரு அணியாக போரிட்டது.

அந்த போரின்போது, அமெரிக்காவின் பியர்ல் ஹார்பர்(Pearl Harbour) மீது தாக்குதல் நடைபெற்றது. அதில் 20 கடற்படை கப்பல்கள், எட்டு போர் கப்பல்கள், 300க்கு மேற்பட்ட போர் விமானங்கள் சேதமடைந்தன. 2000 அமெரிக்க ராணுவத்தினர் உயிரிழந்தனர். சுமார் 1,000 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, அமெரிக்கா 1945-ம் ஆண்டு ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா, நாகாசாகி பகுதிகளில் அணு குண்டு வீசினர். ஹிரோஷிமாவில் நடந்த தாக்குதலில் 1,45,000 பெரும், நாகாசாகியில் சுமார் 74,000 பெரும் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தின் 72-ம் ஆண்டு நினைவு தினம் ஜப்பானில் இன்று அனுசரிக்கப்பட்டது. ஜப்பானின் ஹிரோஷிமா நகரிலுள்ள அமைதி பூங்காவில் நடந்த நிகழ்ச்சியில் அந்நாட்டின் குடியரசுத் தலைவர் ஷின்சோ அபே உட்பட பல தலைவர்கள் கலந்துக்கொண்டனர்.

அதில் பேசிய குடியரசுத் தலைவர், “அணு ஆயுதம் இல்லாத ஒரு உலகத்தை படைக்க வேண்டும்,”என்றார்.

மேலும் படிக்க