• Download mobile app
02 Nov 2025, SundayEdition - 3553
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹிட்லர் வாழ்க என கோஷமிட்ட சீனர்கள் கைது

August 7, 2017 தண்டோரா குழு

ஜெர்மன் நாட்டு பாராளுமன்றம் முன் ‘ஹிட்லர் வாழ்க’ என்று கோஷமிட்ட இரண்டு சீன சுற்றுலா பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜெர்மன் நாட்டை சுற்றிப்பார்க்க வந்த இரண்டு சீன சுற்றுலா பயணிகள், ஜெர்மன் பாராளுமன்ற மன்றத்திற்கு முன் நின்றுகொண்டு, ஹிட்லரின் படையான ‘நாசி யுக’ போர் வீரர்கள் போல் போஸ்களை கொடுத்து கைபேசி மூலம் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். மேலும் ‘ஹிட்லர் வாழ்க’ என கோஷமிட்டனர்.

அவர்களை ஜெர்மன் நாட்டு காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவருக்கும் 500 யூரோ அபராதம் விதிக்கப்பட்டு, அதன் பின் ஜாமீன் வழங்கப்பட்டது.

1933-ம் ஆண்டு முதல் 1945-ம் ஆண்டு வரை அடால்ப் ஹிட்லர் ஜெர்மனி நாட்டை ஆட்சி செய்து வந்தார். அவருடைய ஆட்சி காலத்தில் நாசி ராணுவத்தினர் ‘ஹிட்லர் வாழ்க’ என்று சொல்லும் முறையை பின்பற்றி வந்தனர். ஆனால், அந்த முறை வெறுப்பின் அடையாளமாக இருந்தது. அவருடைய இறப்பிற்கு பிறகு அந்த முறை தடை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க