• Download mobile app
03 May 2026, SundayEdition - 3735
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நோயாளியின் கடைசி ஆசையை நிறைவேற்றிய உணவகம்

August 4, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில் உள்ள உணவகம் ஒன்று மரண தருவாயில் இருந்த நோயாளியின் கடைசி ஆசையை நிறைவேற்றியுள்ளது.

அமெரிக்கா வாஷிங்டின் டி.சி அருகில் நோயால் பாதிக்கப்பட்டு, வாழ்வின் கடைசி நாட்களில் இருக்கும் நோயாளிகளுக்கான இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எமிலி போமேரான்ஸ் என்னும் பெண் அந்த இல்லத்தில் வசித்து வருகிறார். இதனிடையே மரண தருவாயில் உள்ள அவர் அவருடைய தோழியிடம் ஓஹயோ மாகாணத்திலுள்ள டாமி உணவகத்தின் பிரபல ‘மொஸா மில்க்க்ஷேக்’ வேண்டும் என்று கூறியுள்ளார்.

தனது தோழியின் ஆசையை நிறைவேற்ற சாம் முடிவெடுத்தார். உடனே டாமி உணவகத்தின் உரிமையாளார் டாமி பெலோவை தொடர்புக்கொண்டு, தனது தோழியின் ஆசையை தெரிவித்துள்ளார். அதை கேட்ட அவர், எமிலியின் கடைசி ஆசையை நிறைவேற்ற ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையடுத்து, எமிலிக்கு விருப்பமான ‘மொஸா மில்க்க்ஷே’க்கை தயாரித்து, சுமார் 37௦0 மைல் தூரத்திலுள்ள நோயாளிகள் இல்லத்திற்கு அனுப்பி வைத்தார். எமிலி கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். ஆனால், அவர் இறப்பதற்கு நான்கு நாட்கள் முன்பதாக, அவர் விரும்பிய மில்க்க்ஷேக் வந்து சேர்ந்தது. அதை மகிழ்ச்சியுடன் சுவைத்துள்ளர்.

மேலும் படிக்க