• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விமானம் அருகே சென்ற ஏவுகணை

August 4, 2017 தண்டோரா குழு

வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தியபோது, அந்த வழியாக வந்த ஏர் பிரான்ஸ் விமானத்திம் ஆபத்தின்றி தப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐநா சபையின் எச்சரிக்கையை மீறி வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனையை நடத்தி வருகிறது.

இந்நிலையில், டோக்யோ விமான நிலையத்திலிருந்து பாரிஸ் நகருக்கு 330 பயணிகளுடன் ஏர்பிரான்ஸ் விமானம் பயணித்துள்ளது. அப்போது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஹுவான்சாங் 14 ஏவுகணை விமானம் அருகே பாய்ந்து சென்றுள்ளது. அதிர்ஷ்டவசமாக விமானத்தின் மீது அது மோதவில்லை.

அமெரிக்காவின் பாதுகாப்பு துறையின் தலைமையகம் பென்டகான் அதிகாரி கூறுகையில், “கண்டம் விட்டு கண்டம் பாயும் ஹுவான்சாங் 14 விண்ணில் பாய்ந்து, வணிகம் மற்றும் மீன்பிடிக்க பயனபடுத்தப்படும் கடல்பகுதியில் விழுந்து வெடித்துள்ளது” என்று தெரிவித்தார்.

“ஏர்-பிரான்ஸ் விமானம் சென்ற பகுதியில் ஏவுகணையால் எந்த ஆபத்தும் நேரவில்லை.

வெள்ளிக்கிழமை(ஆகஸ்ட் 3) ஏர்பிரான்ஸ் விமான சேவை எப்பொழுதும்போல் சீராக நடந்தது” என்று அந்த விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க