• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மக்கள் வறுமையில் வாடுகையில் எம்.எல்.ஏக்களுக்கு ஊதிய உயர்வு தேவையா?

August 4, 2017 தண்டோரா குழு

மக்கள் வறுமையில் வாடுகையில்எம் எல் ஏக்களுக்கு ஊதிய உயர்வு தேவையா? சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகம் வறுமை, விவசாயி தற்கொலை, கல்விக்கட்டணம் செலுத்த முடியாதநிலையில் உள்ளதால் தமிழக எம்.எல்.ஏ.,க்களுக்கு வழங்கப்பட்ட சம்பள உயர்வை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி மதுரை ஐகோர்ட் கிளையில் ரமேஷ் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இம்மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை , தமிழகத்தின் நிலை குறித்து மனுதாரர் கூறியதை ஆதாரமாக தாக்கல் செய்யவில்லை. சட்டரீதியான கருத்துகள் முன் வைக்கப்படவில்லை எனக்கூறி, தள்ளுபடி செய்தது.

மேலும், எம்.எல்.ஏக்கள் ஊதிய உயர்வு அறிவிப்பு அரசின் நிர்வாக நீதியிலானது என்பதால் தலையிட முடியாது.தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஊதிய உயர்வு சரியா என எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பிக்கொள்ள வேண்டும் என்றும் மக்கள் வறுமையில் வாடுகையில்எம் எல் ஏக்களுக்கு ஊதிய உயர்வு தேவையா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் படிக்க