• Download mobile app
02 Nov 2025, SundayEdition - 3553
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மக்கள் வறுமையில் வாடுகையில் எம்.எல்.ஏக்களுக்கு ஊதிய உயர்வு தேவையா?

August 4, 2017 தண்டோரா குழு

மக்கள் வறுமையில் வாடுகையில்எம் எல் ஏக்களுக்கு ஊதிய உயர்வு தேவையா? சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகம் வறுமை, விவசாயி தற்கொலை, கல்விக்கட்டணம் செலுத்த முடியாதநிலையில் உள்ளதால் தமிழக எம்.எல்.ஏ.,க்களுக்கு வழங்கப்பட்ட சம்பள உயர்வை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி மதுரை ஐகோர்ட் கிளையில் ரமேஷ் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இம்மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை , தமிழகத்தின் நிலை குறித்து மனுதாரர் கூறியதை ஆதாரமாக தாக்கல் செய்யவில்லை. சட்டரீதியான கருத்துகள் முன் வைக்கப்படவில்லை எனக்கூறி, தள்ளுபடி செய்தது.

மேலும், எம்.எல்.ஏக்கள் ஊதிய உயர்வு அறிவிப்பு அரசின் நிர்வாக நீதியிலானது என்பதால் தலையிட முடியாது.தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஊதிய உயர்வு சரியா என எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பிக்கொள்ள வேண்டும் என்றும் மக்கள் வறுமையில் வாடுகையில்எம் எல் ஏக்களுக்கு ஊதிய உயர்வு தேவையா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் படிக்க