• Download mobile app
03 May 2026, SundayEdition - 3735
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தொண்டாமுத்தூருக்கு புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி

August 4, 2017 தண்டோரா குழு

கோவை தொண்டாமுத்தூரில் தொடங்க இருக்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அறிவிக்கப்பட்டது. இதனை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்க உள்ளார்.

இதுதொடர்பாக இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டனர்.

அதன் பின் அமைச்சர் தெரிவிக்கையில்,

“தொண்டாமுத்தூர் பகுதி மக்களின் கோரிக்கையை உடனடியாக ஏற்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (பாரதியார் பல்கலைகழக உறுப்புக்கல்லூரி) தொடங்கப்படவுள்ளது. இக்கல்லூரியில் வகுப்புகள் உடனடியாக தொடங்கப்படவுள்ளது.எனவே தொண்டாமுத்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மாணவ மாணவியர்களும் மேலும் இந்த கல்வி ஆண்டிலேயே தனியார் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவ மாணவியர்களும் இப்புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்ந்து பயனடைய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

மேலும் படிக்க