• Download mobile app
03 May 2026, SundayEdition - 3735
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தற்போதைய அதிமுக ஆட்சி ஊழல் நிறைந்ததாக உள்ளது– ஓபிஎஸ்

August 3, 2017 தண்டோரா குழு

தற்போதைய அதிமுக ஆட்சியில் ஊழல் நிறைந்து உள்ளது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக புரட்சி தலைவி அம்மா அணியைச் சேர்ந்த ஓ.பன்னீர் செல்வம் விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்திருந்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,

கர்நாடக மாநிலத்தில் குஜராத் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏக்ககள் தங்கியிருந்த சொகுசு விடுதியில் வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தியது போன்று கூவத்தூரிலும் ரெய்டு நடத்தி இருக்க வேண்டும். அதிமுக எங்களிடம் தான் உள்ளது. தமிழகத்தில் ஊழல் நிறைந்த ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. தினகரன் வந்த பின்னால் என்ன நடக்கிறது, என்பதை பொறுத்து எங்களது கருத்துக்களை தெரிவிப்போம். தமிழக அரசு பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். நீட் தேர்லிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்றார்.

மேலும் படிக்க