• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இதய நோயால் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுமி கிளிமஞ்சாரோ மலையை ஏறி சாதனை!

August 2, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவின் இதய நோயால் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுமி ஆப்பிரிக்காவின் சிகரமான கிளிமஞ்சாரோ மலையை ஏறி சாதனை படைத்துள்ளாள்.

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தை சேர்ந்த 8 வயது சிறுமி ரோக்ஸ்சி மற்றும் அவளுடைய 10 வயது சகோதரன் பென் இருவருக்கும் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள். இருப்பினும், ஆப்ரிக்க நாட்டிலுள்ள 19,341 அடி உயரமுள்ள கிளிமஞ்சாரோ சிகரத்தை ஏற வேண்டும் என்று ஆர்வம் அவர்களுக்கு இருந்தது.

தங்களுடேய விருப்பத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். பெற்றோரும் அவர்களுடைய இதய மருத்துவருடன் ஆலோசனை செய்த பிறகு, குடும்பத்தை சேர்ந்த அனைவரும் அந்த சிகரத்தை ஏற முடிவு செய்தனர்.

இதையடுத்து, ஆப்ரிக்காவின் கிளிமஞ்சாரோ மலையை ஏற தொடங்கினார். 5 நாட்கள் ஏறிய பிறகு, வெற்றிகரமாக சிகரத்தை அடைந்துள்ளனர். மலையேற தொடங்கிய பென் மற்றும் ரோக்ஸ்சி, மிகவும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் செயல்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் அரிசோனா மாகணத்தின் மலை பகுதியில் மலை ஏறி, பழகியதால், அது அவர்களுக்கு சிரமமாக தெரியவில்லை. அது வரை அவர்கள் இரவில் திறந்த மலை பகுதியில் தங்கியது இல்லை. ஆனால், கிளிமஞ்சாரோ சிகரத்தில் தங்கியது ஒரு புது அனுபவம் என்று அந்த குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மேலும் படிக்க