• Download mobile app
16 May 2024, ThursdayEdition - 3018
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

‘எனக்குப் பிடிக்காத சொற்களில் ஒன்று ‘வேலைநிறுத்தம்’–ரஜினி

August 2, 2017 தண்டோரா குழு

கடந்த 3 மாதங்களாகவே பெப்சி அமைப்பினரின் சம்பள விவகாரம் நடந்து கொண்டிருக்கிறது. எனினும், அது குறித்து தயாரிப்பாளர் சங்கம் எந்த முடிவும் எடுக்கப்படாத பட்சத்தில் நேற்று முதல் பெப்சி அமைப்பினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக நேற்று ரஜினியின் ‘காலா’, விஜய்யின் ‘மெர்சல்’ உட்பட 40 படங்களின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து 2ஆம் நாளான இன்றும் வேலை நிறுத்தம் தொடர்கிறது. இதற்கடையில், தொழிலாளர் நலத்துறை ஆணையர் இருதரப்பினரிடையே பேச்சு வார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், ரஜினி இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனக்குப் பிடிக்காத சில சொற்களில் வேலைநிறுத்தம் என்பதும் ஒன்று என கூறியுள்ளார். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சுய கவுரவம் பார்க்காமல் பொது நலம் மட்டுமே கருதி அன்பான வார்த்தைகளில் பேசி தீர்வு காணலாம் என்றும் ரஜினி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தயாரிப்பாளர் சங்கமும் ஃபெஃப்சி சம்மேளனமும் கலந்து பேசி தீர்வு காண வேண்டுமென மூத்த கலைஞன் என்ற முறையில் கேட்டுக்கொள்வதாக ரஜினி தெரிவித்துள்ளார்.

முன்னதாக,ஃபெஃப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி இது குறித்து ரஜினியை நேரில் சந்தித்துப் பேசியிருந்தார் எண்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க