• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விவசாயிகளுக்கு ஆதரவாக கோவை சட்டகல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

August 2, 2017 தண்டோரா குழு

விவசாயத்தை பாதுகாக்க தொடர்ந்து போராடும் நெடுவாசல்,கதிராமங்கலம் மக்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவாக கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தை நிரந்தரமாக வெளியேற்றக்கோரியும், உரிமைக்காக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த காவல்துறையினரை கண்டித்தும், உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும். நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி 112 நாட்களாக போராடிவருகிற மக்களுக்கு ஆதரவாகவும் சட்டக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக மக்களின் எதிர்ப்பையும் மீறி தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடர்ந்து சுரண்டுவதற்கு முயற்சிகும் மத்திய மோடி அரசை கண்டித்தும், பதவியை பாதுகாக்க தமிகழகத்தை அடகுவைக்காதே என மாநில அரசை கண்டித்தும் மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.இப்போராட்டத்தில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க