• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்து வெளியே குதித்த 17வயது வாலிபன் கைது

August 2, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில் விமானம் தரையிறங்கியதும், விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்து வெளியே குதித்த 17வயது வாலிபனை விமான காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகணத்தின் பனாமா விமான நிலையத்திலிருந்து சான்பிரான்சிஸ்கோ விமானநிலையத்தில் கோபா ஏர்லைன்ஸ் விமானம் 208 தரையிறங்கியுள்ளது. அந்த விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்து 17வயது வாலிபன் ஒருவன் வெளியே குதித்துள்ளான். இதை கண்ட விமான ஊழியர்கள் விமான நிலைய காவல்துறையினருக்கு தகவல் தந்துள்ளனர்.

தகவல் அறிந்த அவர்கள் உடனே அங்கு வந்துள்ளனர். அங்கிருந்து ஓட முயன்ற அந்த வாலிபனை கைது செய்துள்ளனர். அவனிடம் விசாரணை செய்த போது, தான் ஒரு அமெரிக்க குடிமகன் என்றும் தனியே விமானத்தில் பயணம் செய்ததாகவும் தெரிவித்துள்ளான். மேலும் அவன் அதிக மன அழுத்தத்தோடு காணப்பட்டுள்ளான்.

இந்த திடீர் சம்பவத்தால், எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. அந்த விமானத்தில் இருந்த பயணிகள் பத்திரமாக கீழே இறங்கியுள்ளனர் என்று அந்த விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க