• Download mobile app
06 May 2025, TuesdayEdition - 3373
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உ.பி.யில் விவசாயிக்கு 1.80 லட்சம் மின்சார கட்டணம்!

August 2, 2017 தண்டோரா குழு

உத்தர பிரதேஷ் மாநிலத்தை விட்டு ஹரியானா மாநிலத்திற்கு குடிபெயர்ந்து விவசாயிக்கு 1.80 லட்சம் மின்சார கட்டணம் வந்துள்ளது.

உத்தர பிரதேஷ் மாநிலத்தின்,நக்லா டெலி கிராமத்தில்,இஸ்லாம் மாலிக் என்னும் தெரு வியாபாரி வசித்து வந்துள்ளார்.கடந்த 1989, தன்னுடைய வீட்டிற்கு மின்சார இணைப்பு வேண்டி, மின்சார துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், ஒரு குடிசைக்கு மின்சார இணைப்பு தர முடியாது என்று அவர்கள் அவருடைய கோரிக்கையை நிராகரித்துள்ளனர்.இந்நிலையில் மின்சார இணைப்பு வேண்டுமென்றால், அதிகாரிகளுக்கு 50,00௦0 ரூபாய் லஞ்சம் தரவேண்டும்.

இதையடுத்து, கடந்த 2000ம் ஆண்டு, மாலிக் தனது மகளின் மருத்துவ செலவுகளுக்காக வாங்கிய கடனை அடைக்க, தனது விவசாய நிலங்களை தன்னுடைய நண்பருக்கு விற்றுவிட்டார். அதன் பிறகு, ஹரியானா மாநிலத்தின் பரிதாபாத் நகருக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு, மின்சார கட்டண தொகை 1.80 லட்சம் என்ற மின்சார கட்டண ரசீது அவருடைய பெயருக்கு வந்துள்ளது என்று அவருடைய நண்பர்கள் தெரிவித்துள்ளனர். மின்சாரத்தை பயன்படுத்தாத அவருக்கு அவ்வளவு பெரிய தொகை வந்திருந்தது, அதிர்ச்சியை தந்துள்ளது.

உடனே, இட்டா நகர் மாவட்ட நீதிபதி, அமித் கிஷோரை சந்தித்த அந்த விவசாயி, தனது நிலையை தெரிவித்துள்ளார். உடனே இது குறித்து விசாரணை நடத்த காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க