• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சீனாவைச் சேர்ந்த 4 வயது சிறுமி, தனது தாயுடன் கேரள சிறையில் அடைப்பு

August 2, 2017 தண்டோரா குழு

சீனாவை சேர்ந்த 4 வயது சிறுமி, தனது தாயுடன் கேரள சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவை சேர்ந்த ஜியோலின் என்னும் பெண், தனது 4 வயது மகள் ஹான் ரியு ஹெள மற்றும் அவரது சகோதரர் சாங் க்வி ஹெள ஆகியோருடன் இந்தியாவின் கேரளா மாநிலத்திதிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கேரளாவின் காக்காநாடு என்னும் இடத்தில் ஒரு வீடு எடுத்து தங்கியுள்ளார்.

இந்நிலையில், இந்தியாவில் இருக்கும் விசா காலம் முடிந்த பிறகும், ஜியோலின் இந்தியாவில் தங்கியுள்ளனர் என்று கேரளா காவல்துறையினர் அவரையும் அவருடைய மகளையும் ஜூலை 19ம் தேதி கைது செய்துள்ளனர். ஆனால் அந்த பெண்ணின் உறவினர் தப்பி தலைமறைவாகிவிட்டார். அந்த பெண்ணின் மீது வழக்கு பதிவு செய்து,நீதி மன்றத்தில் ஆஜார் படுத்தியுள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜியோலின் சிறையில் அடைக்குமாறு அந்த நீதிபதி தீர்பளித்தார். ஆனால், கேரளாவில் ஜியோலினுக்கு உறவினர்கள் யாரும் இல்லாததால், அவருடைய மகளை பார்த்துக்கொள்ள யாருமில்லை. இதையடுத்து, அவருடைய மகளையும் தாயுடன் சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும், அவர்களுக்கு சீன உணவை வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்ட பிறகும், அந்த உணவை வழங்க முடியவில்லை. மற்ற கைதிகளுக்கு வழங்கும் உணவு தான் இவர்களுக்கும் வழங்கப்படுகிறது. சுதந்திரமாக பாடி திரிந்த குழந்தை, சிறைப்பட்டு இருப்பது வேதனையை தருகிறது.

மேலும் படிக்க