• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மித்தாலி ராஜுக்கு பி.எம்.டபிள்யூ கார் பரிசு

August 1, 2017 தண்டோரா குழு

இந்திய மகளீர் அணி கேப்டன் மித்தாலி ராஜுக்கு பி.எம்.டபிள்யூ கார் ஒன்றை தொழிலதிபர் பரிசாக வழங்கியுள்ளார்.

ஆந்திர பிரதேஷ் மாநிலம் ஹைதராபாத் நகரை சேர்ந்தவர் சாமுண்டேஸ்வரநாத். சமீபத்தில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த உலக கோப்பை ஐசிசி கிரிகெட் போட்டியில், இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்தது. ஆனால், இறுதி போட்டிவரை இந்தியாவை அழைத்து சென்ற இந்திய மகளீர் அணி கேப்டன் மித்தாலி ராஜுக்கு பாராட்டுகள் குவிந்தன.

இதையடுத்து, மித்தாலி ராஜுவை பாராட்டும் விதமாக பி.எம்.டபிள்யூ கார் ஒன்றை சாமுண்டேஸ்வரநாத் பரிசாக தந்துள்ளார்.

“இந்த மகளீர் கிரிகெட் அணி போட்டியில் நன்றாக விளையாடினார்கள். அதனால், உலக கவனம் முழுவதும் அவர்கள் மீது திரும்பியுள்ளது. நமது நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். அவர்களை நாம் உற்சாகப்படுத்த வேண்டும்” என்று சாமுண்டேஸ்வரநாத் தெரிவித்தார்.

2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெற்றிபெற்ற பாட்மிட்டன் வீராங்கனை பி.வி. சிந்து, மல்யுத்த போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற சாக்க்ஷி மாலிக், ஜிம்னாஸ்டிக் போட்டியில் வெற்றிபெற்ற தீபா கர்மர்கர், மற்றும் பாட்மிட்டன் பயிற்சியாளர் கோபிசந்த் ஆகியோருக்கும் இவர் பி.எம்.டபிள்யூ கார்களை பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க