• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

16 வயது ஹரியானா சிறுவனுக்கு கூகுளில் 12 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை

August 1, 2017 தண்டோரா குழு

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த 16 வயது வாலிபனுக்கு பிரபல கூகுள் நிறுவனத்தில் மாதம் 12 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது.

ஹரியானா மாநிலம் குருஷேத்திர மாவட்டம் மணாத்தா என்னும் இடத்தை சேர்ந்த ஹர்ஷிட் ஷர்மா என்னும் 16 வயது வாலிபனுக்கு கூகுள் நிறுவனத்தில் கிராபிக் டிசைனராக பணியில் சேரவுள்ளான். அவனது வருடாந்திர சம்பளம் 1.44 கோடி ரூபாய் ஆகும்.

கூகுள் நிறுவனத்தில் ஓர் ஆண்டு காலம், ஹர்ஷிட் பயிற்சி பெறவேண்டும். இந்த பயிற்சி காலத்திற்கு அவருக்கு 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும். பயிற்சி முடித்த பிறகு, மாத சம்பளமாக அவருக்கு 12 லட்சம் வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

ஹர்ஷிட் பள்ளியில் படித்துக்கொண்டு இருக்கும்போததே, ஆன்லைன் மூலம் வேலைகளை தேடி வந்துள்ளார். அப்படி தேடிக்கொண்டிருக்கும் போது, அந்த வேலைக்காக கடந்த மே மாதம் விண்ணப்பித்துள்ளான். அவருடைய விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட கூகுள் நிறுவனம், அவர் செய்திருந்த கிராபிக்ஸ் டிசைன்களை பார்த்துள்ளது. அதன் பிறகு, ஹர்ஷித்திற்கு ஆன்லைன் மூலம் நேர்க்காணல் நடத்தியுள்ளது. அதன் முடிவில், கிராபிக்ஸ் டிசைனர் பதவியை அவனக்கு ஜூன் மாதம் வழங்கியுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் ஹர்ஷிட் டிசைன் செய்த கிராபிக்ஸ்காக 7,000 ரூபாய் பரிசையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க