• Download mobile app
02 Aug 2026, SundayEdition - 3826
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போரில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் திறக்கவுள்ளார் ஜார்ஜ் க்ளூனி

August 1, 2017 தண்டோரா குழு

அமெரிக்க ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி, சிரியா உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட அகதிகளான குழந்தைகளுக்கு லெபனான் நாட்டில் பள்ளிகளை திறக்கவுள்ளார்.

அமெரிக்காவின் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி மற்றும் அவருடைய மனைவி அமல் ‘Clooney Foundation of Justice’ என்னும் அறக்கட்டளை நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். அந்த நிறுவனத்தின் வழியாக சிரியா நாட்டில் உள்நாட்டு போரால், பாதிக்கப்பட்ட சுமார் 3,000க்கும் மேற்பட்ட அகதிகளான குழந்தைகளுக்கு லெபனான் நாட்டில் பள்ளிகளை திறக்கவுள்ளார்.

“இதன் மூலம் குழந்தைகளுக்கு ஒரு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்க முடியும். நாளைய தலைவர்களாக வரும் அந்த குழந்தைகளுக்கு ஒரு நல்ல எதிர்க்காலத்தை பெறுவார்கள்” என்று அந்த அறக்கட்டளை வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் படிக்க