• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

போரில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் திறக்கவுள்ளார் ஜார்ஜ் க்ளூனி

August 1, 2017 தண்டோரா குழு

அமெரிக்க ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி, சிரியா உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட அகதிகளான குழந்தைகளுக்கு லெபனான் நாட்டில் பள்ளிகளை திறக்கவுள்ளார்.

அமெரிக்காவின் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி மற்றும் அவருடைய மனைவி அமல் ‘Clooney Foundation of Justice’ என்னும் அறக்கட்டளை நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். அந்த நிறுவனத்தின் வழியாக சிரியா நாட்டில் உள்நாட்டு போரால், பாதிக்கப்பட்ட சுமார் 3,000க்கும் மேற்பட்ட அகதிகளான குழந்தைகளுக்கு லெபனான் நாட்டில் பள்ளிகளை திறக்கவுள்ளார்.

“இதன் மூலம் குழந்தைகளுக்கு ஒரு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்க முடியும். நாளைய தலைவர்களாக வரும் அந்த குழந்தைகளுக்கு ஒரு நல்ல எதிர்க்காலத்தை பெறுவார்கள்” என்று அந்த அறக்கட்டளை வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் படிக்க