• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முட்டை ஊழல் அம்பலம் – கமல்

August 1, 2017 தண்டோரா குழு

பெரம்பலூரில் உள்ள அரசு பள்ளியில் கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தினர் மேற்கொண்ட ஆய்வின் போது சத்துணவு முட்டை ஊழல் அம்பலமானது.

நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசு மீதும் அமைச்சர்கள் மீதும் தொடர்ந்து டுவிட்டரில் ஊழல் குற்றச்சாட்டை முன் வைத்து வருகிறார்.அதற்கு பதிலளித்த அமைச்சர்கள் உரிய ஆதாரத்துடன் கமல் பேசவேண்டும் என கூறிவந்தனர். இதற்கிடையில் அரசு துறை ஊழலை அம்பலப்படுத்துங்கள் என கமல் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், பெரம்பலூர், வேந்தம்பட்டை, குன்னம் அங்கானவாடிகளில் கமல் ரசிகர் மன்றத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, சாதிக் பாட்ஷா ஆகியோர் கடந்த 24ம் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மாணவர்களுக்கு அழுகிய முட்டை வழங்கியது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்த போது இதனை பெரிதுபடுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து கமல் தனது டுவிட்டர் பக்கத்தில்,

பெரம்பலூரில் அம்பலமான முட்டை ஊழல் இயக்கத்திற்கு பெருமையே. எனினும் இயக்க வக்கீல்களின் ஆலோசனைப்படி செயல்படவும். சட்டமீறல் நம் தரப்பில் கூடாது.எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க