• Download mobile app
02 Nov 2025, SundayEdition - 3553
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சீனாவில் புல்லட் ரெயில்களை மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் இயக்க திட்டம்

July 29, 2017 தண்டோரா குழு

சீனாவின் புல்லட் ரயிலின் வேகத்தை 350 கிலோமீட்டர் வேகத்தில் இயக்க சீன அரசு திட்டமிட்டுள்ளது.

உலகின் மிக நீளமாக அதிவேக ரயில் நெட்வொர்க் சீனாவில் காணப்படுகிறது.கடந்த 2011 ம் ஆண்டு, சீனாவின் கிழக்கு சேஜியாங் மாகணத்தில் நடந்து புல்லட் ரயில் விபத்தில் சுமார் 30 பேர் உயிரிழந்தனர். அந்த விபத்திற்கு பிறகு, புல்லட் ரயில்கள் 250 கிலோமீட்டர் முதல் 300 கிலோமீட்டர் வேகத்தில் தான் செல்ல வேண்டும் என்றும் சீன அரசு உத்தரவிட்டது.

ஆனால் தற்போது, 350 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் புல்லட் ரயில்கள் சீனாவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்பதாக பெய்ஜிங்கில் இருந்து ஷாங்காய் செல்ல சுமார் 6 மணி நேரம் ஆகும். ஆனால், இந்த புதிய புல்லட் ரயில் மூலம் 4.5 மணி நேரத்தில் ஷாங்காய் நகருக்கு செல்ல முடியும். இந்த புதிய ரயில் சேவை வரும் செப்டம்பர் மாதம் முதல் தொடங்க சீன அரசு திட்டமிட்டுள்ளது.

சீனாவின் 31 மாகணங்களில் 29 மாகணங்களில் புல்லட் ரயில் சேவைகள் உண்டு. ஆனால், சீனாவின் வட மேற்கு பகுதிகளான திபெத் மற்றும் நிங்சியா பகுதிகளில் மட்டுமே இந்த சேவை இன்னும் தரப்படவில்லை. விரைவில் இந்த சேவை அந்த இடங்களிலும் செயல்ப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க