• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக மீனவர்கள் 77 பேர் விடுதலை

July 29, 2017 தண்டோரா குழு

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 77பேரைவிடுதலை செய்தது அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மீனவர்கள்எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து 92 மீனவர்களை அந்நாட்டு சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.மீனவர்களுடன் 150-க்கும் மேற்பட்ட படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் 77 பேரை நல்லெண்ண அடிப்படையில் இலங்கை அரசு விடுதலை செய்ததுள்ளது. அவர்கள் நாளை தமிழகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே தமிழக மீனவர்களின் படகுகளையும் இலங்கை அரசு விடுக்கவேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க