• Download mobile app
02 Nov 2025, SundayEdition - 3553
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘டி.கே ராஜேந்திரனுக்கு பதவி நீட்டிப்பு அளித்ததில் தவறு இல்லை’ – உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை

July 28, 2017 தண்டோரா குழு

தமிழக டி.ஜி.பி. டி.கே ராஜேந்திரனுக்கு பதவி நீட்டிப்பு அளித்ததில் தவறு இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

அண்மையில் பணி ஓய்வு பெற இருந்த டி.கே ராஜேந்திரனுக்கு தமிழக அரசு மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு செய்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அம்மனுவில், குட்கா ஊழல் விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்படும் டி.ஜி.பி ராஜேந்திரனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கியிருப்பது சரியல்ல எனவே ராஜேந்திரனின் பணி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் விசாரணை இன்று வந்த போது, “டி.ஜி.பி.யாக டி.கே.ராஜேந்திரன் பதவி நீட்டிப்பு செய்யப்பட்டதில் தவறு இல்லை. ராஜேந்திரன் மீதான லஞ்சப்புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் தலைமையில் விசாரிக்க ஆணையம் அமைக்க வேண்டும்” என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் படிக்க