• Download mobile app
03 May 2026, SundayEdition - 3735
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்டாலின் கைது ஏன் ? முதல்வர் விளக்கம்

July 27, 2017 தண்டோரா குழு

அனுமதியின்றி மனித சங்கிலி போராட்டம் நடத்தினால் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனால் தான் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் என முதலமைச்சர் கூறியுள்ளார்.

மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் மணிமண்டபம் திறப்பு விழா நிகழ்சிக்கு சென்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம் என்றார்.

அப்போது ஸ்டாலின் கைது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது பதிலளித்த அவர் அனுமதி பெறாமல்மனித சங்கிலி போராட்டம் நடத்தினால், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது என்றார்.

மேலும் படிக்க