• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தாய்லாந்து மன்னரின் பிறந்தநாளை முன்னிட்டு 1066 ஆமைகள் கடலில் விடப்பட்டன

July 27, 2017 தண்டோரா குழு

தாய்லாந்து நாட்டில் மன்னரின் பிறந்த நாளை முன்னிட்டு சுமார் 1,௦66 ஆமைகள் கடலில் விடப்பட்டது.

தாய்லாந்து நாட்டில் மன்னர் பூமிபோல் அதுல்யாதேஜ், அந்நாட்டை சுமார் 7௦ ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவர் கடந்த அக்டோபர் மாதம் காலமானார். அவருக்கு பிறகு, அவருடைய மகன் வஜிரலாங்கோரன் மன்னராக பதவி ஏற்றார்.

இந்நிலையில் அவருடைய 65வது பிறந்த நாள் நாளை(ஜூலை 28) கொண்டாடப்படவுள்ளது.இதனை முன்னிட்டு தாய்லாந்து நாட்டின் சொன்புரி மாகணத்தின் சட்டாஹிப் கடற்படை தளத்தின் அருகிலுள்ள கடல்பகுதியில், நூற்றுக்கணக்கான பள்ளி சிறுவர் சிறுமிகள் மற்றும் கடற்படை அதிகாரிகள் ஒன்று சேர்ந்து, சுமார் 1,௦66 ஆமைகளை கடலுக்குள் விட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் மன்னருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ந்தனர். அந்நாட்டின் புத்த துறவிகளும் நல்ல கர்மா அல்லது முன்வினை பயனை அடைய, சிறைபிடிக்கப்பட்ட ஆமைகள், பறவைகளை விடுவிப்பது வழக்கம்.

பொதவாக ஆமைகள் நீண்ட வாழ்நாளுக்கு அடையாளம் என்பதால், அந்நாட்டின் மன்னருடைய வாழ்நாளும் நீண்டதாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த ஆமைகள் விடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க