• Download mobile app
03 May 2026, SundayEdition - 3735
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்பு

July 27, 2017 தண்டோரா குழு

பீகார் முதலமைச்சர் பதவியை நிதிஷ்குமார், நேற்று ராஜினாமா செய்த நிலையில் பா.ஜ.க ஆதரவுடன் இன்று மீண்டும் பதவியேற்று கொண்டார்.

லாலு பிரசாத்தின் மகனும், முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி மீது மோசடி வழக்கு தொடரப்பட்டது. இதனால் அவர் பதவி விலகாத காரணத்தினால் மெகா கூட்டணியில் இருந்து விலகி முதலமைச்சர் பதவியை நிதிஷ்குமார், நேற்று ராஜினாமா செய்தார்.

இதனிடையே பீகார் ஆளுநர் திரிபாதியை நேற்று மாலை சந்தித்து, பதவி விலகல் கடிதத்தை கொடுத்து வெளியேறினார். நிதிஷ்குமார் ஆட்சியமைக்க பா.ஜ.க, ஆதரவு அளித்தது இதனையடுத்து கவர்னரை சந்தித்து மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார், இதனையடுத்து இன்று காலை நிதிஷ்குமார் மீண்டும் பீகார் முதலமைச்சராக பதவியேற்று கொண்டார். பா.ஜ.க,வை சேர்ந்த சுஷில்குமார் மோடி துணை முதலமைச்சராக பதவியேற்று கொண்டார்.

மேலும் படிக்க