• Download mobile app
03 May 2026, SundayEdition - 3735
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசு மெத்தனமாக செயல்படவில்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்

July 26, 2017 தண்டோரா குழு

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக செயல்படவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

இதுக்குறித்து செய்தியாளர்களிடம் விஜயபாஸ்கர் கூறியதாவது,

” நீட் தேர்விலிருந்து முழு விலக்கு பெறுவதே தமிழக அரசின் கொள்கை. தமிழக அரசு நீட் தேர்வு வேண்டாம் என்பதில் உறுதியாக உள்ளது. இதற்காக மத்திய அரசிடம் தமிழக அரசு தொடர்ந்து போராடி வருகிறது.

பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. நீட் தேர்வு விவகாரத்தில் சட்ட சிக்கல்கள் உள்ளன. அதனை சரிசெய்ய ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசு பரிசீலிப்பதாகக் கூறியுள்ளது.

தமிழகத்துக்கு சாதகமாக விலக்கு அளிக்க சில கூடுதல் விவரங்களைக் மத்திய அரசு கேட்டுள்ளது. அவற்றை அளிப்பதற்காக தமிழக தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் தில்லி சென்றுள்ளனர்.

இந்த விவகாரத்தில் நல்ல தீர்வு வரும் என்று நம்பிக்கையோடு இருக்கிறோம். தமிழக அரசு மெத்தனமாக செயல்படவில்லை.”

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க