• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் சங்க கட்டிட விவகாரம் : தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவு

July 25, 2017 தண்டோரா குழு

நடிகர் சங்க கட்டிட விவகாரத்தில் தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக விஷால் அணியின் தலைமையில் சென்னை தி.நகரில் உள்ள அபிபுல்லா சாலையில் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடம் கட்டப்பட இருக்கிறது. இதற்கான பூமி பூஜை விழாவில் நடிகர் ரஜினி, கமல் மற்றும் பல நடிகர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில்,கட்டிடம் கட்ட வேலைகள் தொடங்கிய நிலையில், அப்பகுதியை சேர்ந்த ஒருவர் நடிகர் சங்க கட்டிடம் சாலையை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து உயர்நீதிமன்றம் சங்க கட்டிடம் கட்ட இடைக்காலத் தடை விதித்தது. இதனால் நடிகர் சங்க கட்டிட வேலைகள் செய்யாமல் தடையில் இருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரனைக்கு வந்த போது நடிகர் சங்கம் சார்பாக விஷால் அணியினர் நடிகர் சங்க கட்டிடம் கட்ட எந்த இடத்தையும் ஆக்கிரமிப்பும் செய்யவில்லை என தங்கள் தரப்பு விளக்கத்தை உயர்நீதிமன்றத்தில் அளித்துள்ளனர்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் கட்டிடம் கட்ட விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டது. கட்டிடம் கட்ட தடை நீங்கியதால் விஷால் தரப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

மேலும் படிக்க