அமெரிக்காவில் செல்ல பிராணிகளான நாய் என்ன பேசுகிறது என்பதை மனிதர்கள் பேசும் மொழியில் மாற்றக்கூடிய ஒரு புதிய கருவியை தயாரிக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுப்பட்டுள்ளனர்.
வட அமெரிக்காவில் வாழும் Priarie Dogs, நிலத்தில் குழி தோண்டி வாழும் அணில் வகையை சேர்ந்தது. இந்த Priarie Dogs களை கொண்டு சில ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டது. அந்த ஆராய்ச்சியின்போது, நிறங்கள் மற்றும் விலங்குகளின் வகைகளை சரியாக கண்டுபிடிக்க பிரத்தியோக சொற்களை பயன்படுத்தியது தெரிய வந்ததுள்ளது.
இந்த முறையை மையமாக கொண்டு, வீட்டின் செல்ல நாய், பூனை, உள்ளிட்ட பிராணிகளின் மொழிகளை புரிந்துக்கொண்டு, அதை மனித மொழியில் வழங்கும் கருவி ஒன்றை உருவாக்க பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
இந்த பணியை, அமெரிக்காவின் வட அரிசோனா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கோன் ஸ்லோபோத்சிக்ஆப் தலைமையின் கீழ் உள்ள குழு செயல்பட்டு வருகிறது.
மேலும், இந்த புதிய முயற்சிக்கு அமேசான் நிறுவனம் ஆதரவு அளித்து வருகிறது. இன்னும் 1௦ ஆண்டுகளில், இந்த கருவியை பயன்படுத்தி செல்ல பிராணிகளுடன் பேசலாம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஜெம் மருத்துவமனை மற்றும் இந்திய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சங்கம் சார்பில் தேசிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மாநாடு மற்றும் மேம்பட்ட மருத்துவ பயிற்சி
வி.ஜி.எம். அறக்கட்டளை மற்றும் கரூர் வைஸ்யா வங்கி இணைந்து அதிநவீன இரத்த வங்கியை தொடங்கியுள்ளது
சுந்தரி கிருஷ்ணகுமார் காலமானார்
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள்
ஸ்கோடா பிராண்ட் இந்தியாவில் நன்கு வலுப்படுத்தி, 2025-ஆம் ஆண்டு ஒரு வளர்ச்சியின் ஆண்டாக உருவாகிவருகிறது
கோவையில் 3 நாட்கள் நடைபெறும் ஆசிய நுண்கலை நகை கண்காட்சி 2025 இன்று துவங்கியது !