• Download mobile app
01 Nov 2025, SaturdayEdition - 3552
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘நீட்’ தேர்வு விலக்கு குறித்து பரிசீலிப்பதாக மோடி தகவல்

July 25, 2017 தண்டோரா குழு

‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,

“மருத்துவ படிப்பில் மாணவர்களை சேர்க்க நடைபெறும் ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு அளிக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளேன். ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

நாகை, கடலூர் மாவட்டங்களை பெட்ரோலிய மண்டலங்களாக அறிவிக்கும் திட்டம் பல ஆண்டுகளாக உள்ளது. 17 ஆண்டுகளுக்கு மேலாகவே இந்த திட்டம் உள்ளது.

கதிராமங்கலத்தில் எண்ணை கசிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குழாய்களை செப்பனிடும் பணி செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்துகின்றனர்.

ஹைட்ரோகார்பன் திட்டம் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம்.”

இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

மேலும் படிக்க